மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்!

திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் அடுத்த குண்ணம்பட்டியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியான சித்ராதேவி, நாகம்பட்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரியம்மாளின் உறவினரிடம் இருந்து விவசாய நிலத்தை வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி சித்ராதேவியை தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சம்வத்தன்று, தனது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த சித்ராதேவி மற்றும் அவரது உறவினர் புவனேஷ்வரியை, முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளருடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.

Exit mobile version