ராசா சார்.. இதான் உங்க சமூக நீதியா? அப்பாவி தொண்டனை அடிமைத் தொண்டனாக நடத்திய ஆ. ராசா!

திமுகவுல வாரிசு அமைச்சரோட கடைக்கண் பார்வை தன்மேல விழலும்னு சீனியர்கள் எல்லாம் அவரையே சுத்தி சுத்தி வர்றதும், அவருக்காக எடுப்பு வேலை எல்லாம் பார்க்கிறதுமாவே இருந்துக்கிட்டு இருக்காங்க…ஏற்கனவே அண்ணா அறிவாலயத்துல நடந்த திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் கூட்டத்துல பேசுன ஆ.ராசா, எதிர்கால தலைமைக்கான ஏற்பு உதயநிதிக்கு இருப்பதாவும், 20 வருஷம் கழிச்சி திமுகவுக்கு உதயநிதி தலைமை தாங்குவருன்னு ஜோசியம் சொல்லிட்டு இருந்தாரு…

இப்படி தன்னோட எதிர்காலத்துக்காக வாரிச சுத்தி சுத்தி வர்ற ஆ.ராசா அதுக்காக, திமுக தொண்டர்கள எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டுறதும், மரியாதை இல்லாம நடத்துறதுமா இருக்காராம். கடந்த 28ஆம் தேதி பெரம்பலூருக்கு வந்த உதயநிதிக்கு வரவேற்பு கொடுக்க ஆ.ராசா திட்டம் போட்டிருக்காரு… தொண்டர்கள் ஒரே இடத்துல கும்பலா நின்னதால, எல்லாம் பிரிஞ்சி வழிநெடுக நில்லுங்க…அப்பத்தான் கூட்டமா காட்டமுடியும்னு சொல்லியும் தொண்டர்கள் கண்டுக்கிடாததால, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களப் பார்த்து யாருடா ஏற்பாடு செய்தது காட்டுக் கத்தல் கட்டியிருக்காராம்… சமீபத்துல நடத்துன நீட் உண்ணாவிரதத்துலயும், தொண்டரப் பார்த்து, ஏய் லூசுப் பயலே, உட்காருடான்னு ஒருமையில திட்டினாரு… இப்படி தொண்டர்கள திட்டுறதும், கீழ்த்தரமா பேசுறதும் தான் ஆ.ராசாவோட சமூக நீதியா? நீங்க திமுக வாரிசுகளுக்கு காவடி எடுத்து பதவிகளையும் பொறுப்புகளையும் வாங்கிக் குவிச்சிக்கிட்டு போறதுக்கு அப்பாவி தொண்டன ஏன் இப்படி அடிமை மாதிரியே நடத்துறீங்கன்னு நாங்க சொல்லல… உருக்குள்ள பேசிக்கிறாங்க

Exit mobile version