சட்டைநாதரை தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்!

நாத்திகம் பேசுன திமுக, கருணாநிதி குடும்பத்தோட பிடியில போனதுக்குப்பிறகு நேரத்துக்கு தகுந்த மாதிரி கொள்கைய மாத்திகிட்டாங்க. இன்னைக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்காரங்க மட்டுமில்ல, திமுக முக்கிய நிர்வாகிகளே வெளியில சனாதனம் பத்தி சண்டித்தனமா பேசிக்கிட்டே, கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டு இருக்காங்க… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில உள்ள சட்டைநாதர் சுவாமி கோயில்ல அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் போய் சாமி கும்பிட்டிருக்காங்க. அமைச்சர்களுக்கு அந்தப் பகுதியில பிரத்யேகமாக எந்த கூட்டமோ, நிகழ்ச்சிகளோ இல்லாத நிலையில சாமிகும்பிடுறதுக்காகவே கோயிலுக்கு வந்துட்டு போயிருக்காங்க. இந்த கோயில்ல உள்ள சட்டைநாதர வணங்குனா எதிரிகள் தொல்லை நீங்கும்… நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும்னு ஐதீகம் இருக்கு… ஏற்கனவே அமலாக்கத்துறை ரெய்டால திமுகவே அள்ளுவிட்டு கிடக்குது.. அதே மாதிரி ஜட்ஜ்மெண்ட் வந்த கேசுலேயே சூமோட்டோவா வழக்க எடுத்துக்கிறதால அமைச்சர்கள் எல்லாம் அரண்டு போய் இருக்காங்க.. இந்த மாதிரி தாங்களும் எதுலயும் மாட்டிக்கக்கூடாதுன்னுதான் நேருவும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தேடிப்போய் சட்டைநாதரை கும்பிட்டாங்களோன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
YouTube video player

Exit mobile version