உதயநிதிக்கு வரிசைகட்டி வணக்கம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள்

சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பேரவைக்குள் சபாநாயகர் மற்றும் முதலமைச்சருக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் வணக்கம் தெரிவிப்பது மறபு. மற்றபடி எதிரெதிரெ சந்திக்கும் உறுப்பினர்கள் வணக்கம் தெரிவித்துக் கொள்வர். ஆனால், முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதியை அவரது இருக்கைக்கே வந்து, வரிசையில் நின்றபடி திமுக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர், வணக்கம் தெரிவித்தனர். ஆனால், உதயநியோ, அவை நாகரிகத்தை பின்பற்றாமல் இருக்கையில் அமர்ந்துகொண்டே வணக்கம் தெரிவித்தார். இந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

Exit mobile version