டீக்கடைகாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி கைது

சென்னை தண்டையார்பேட்டையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி, டீக்கடைகாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தண்டையார்பேட்டையில், கன்னியப்பன் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, கன்னியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கன்னியப்பன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரமேஷை விசாரித்த போது, அவர் திமுக வட்டச் செயலாளர் என்பது தெரிய வந்ததது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறிய அளவில் தொழில் செய்து வருவோரிடம், வித விதமான வழிகளில், திமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவது தொடர்கதையாகிவிட்டது. ஆனால், டீ கடையை கூட விட்டு வைக்காமல், திமுக நிர்வாகிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது, திமுக மீது மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version