“விடியா அரசு ஈரோடு இடைத்தேர்தலில் மோசடி செய்து வெற்றிப்பெற்றது” – எஸ்.பி.வேலுமணி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பல்வேறு மோசடிகளை செய்தே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழிக்காட்டுதலின்படி, கோவை, குனியமுத்தூர் பி.கே.புதூர்
பகுதியில், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், விடியா திமுகவினர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து வெற்றி பெற்றது போல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பல்வேறு மோசடிகளை செய்தே காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளனர் என விமர்சித்தார்.YouTube video player

Exit mobile version