விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.YouTube video player

ராசிபுரம் அருகே மூலப்பட்டி ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைத்தல்,
பண்ணை குட்டை அமைத்தல், தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றதாக கூறி திமுக ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பணம் மோசடி செய்தது தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பினர். மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் திகைத்து நின்றார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version