முப்பதாயிரம் லஞ்சம் கேட்ட திமுக கவுன்சிலர் ! ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ராபர்ட் ராஜ். இவர் திமுகவின் வட்டச் செயலாளரக உள்ளார். இந்த நிலையில் தனது நண்பரின் வீட்டுக்கு வரி ரசீது பெற மேலப்பாளையம் மண்ட தலைவரான கதீஜா என்பவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வீட்டு வரி ரசீது வழங்க 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கதீஜா கராராக கூறியதால் வேறு வழியின்றி ராபர்ட் ராஜ் 10 ஆயிரம் ரூபாயை முன் தொகையாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் கதீஜாவின் தந்தையும், திமுக பகுதி செயலாளருமான துபாய் சாகுலிடம், ராபர்ட் ராஜ் செல்போனில் முறையிட்டுள்ளார். இந்த செல்போன் உரையாடல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version