அதிமுக அரசு மீது திமுகவினரால் எந்த குறையும் சொல்லமுடியவில்லை :அமைச்சர் செல்லூர் ராஜு

 மறைந்த முதலமைச்சர் ஜெலலிதாவைப் போன்று, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கீழவாசலில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு கலந்துக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மீது எந்தவித குறையும் தி.மு.க.வினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப்பார்த்து, ஸ்டாலின் திருந்தவேண்டும் எனவும் விமர்சித்தார்.

Exit mobile version