பிரசாரத்தின்போது வாகனத்தை விட்டு இறங்கிய திமுக வேட்பாளர்

தேர்தல் பிரசாரத்தின்போது, செல்போன் அழைப்பு வந்ததால் வாகனத்தை விட்டு இறங்கிய திமுக வேட்பாளரால் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதனால், வேட்பாளர் அண்ணாதுரை பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சென்றார். இது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய எம்.எல்.ஏ. பிச்சாண்டியும் இதனால் அதிருப்தி அடைந்தார்.

Exit mobile version