பல கோடி மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில் வேலன்

பல கோடி ரூபாய் மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில் வேலனை கைது செய்ய கோரி தொழிலதிபர்கள் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர்கள் வினோத் பட்டேல், ஜீகர் பட்டேல். இருவரும் அதே பகுதியில் ஸ்ரீராம் என்ற பெயரில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் மரமில் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் வாடிக்கையாளராக அறிமுகமான புதுக்கோட்டை இலுப்பூரை சேர்ந்த செந்தில்வேல் என்பவர், நெருங்கி பழகியுள்ளார். பின்னர் தொழிலை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்ட மில் உரிமையாளர்களிடம், தான் திமுகவில் இருப்பதாகவும், பல முக்கிய புள்ளிகளை தெரியும் என்றும் கூறியுள்ளார். குறைந்த வட்டியில் பல கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக அவர் செந்தில்வேலனை ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மில் உரிமையாளர்கள் அவரிடம் 3 தவணைகளாக 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்று கொண்ட செந்தில்வேலன் தலைமறைவாகியுள்ளார். இதேபோல், பல்வேறு தொழிலதிபர்களிடம் செந்தில்வேல் பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில்வேலனை கைது செய்ய கோரி மில் உரிமையாளர்கள், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர் .

Exit mobile version