வாக்காளர்களுக்கு கறிசோறு போட்டு இன்பச்சுற்றுலா கூட்டிச்சென்ற விடியா திமுகவினர்!

கறி சோறு, இன்பச்சுற்றுலா என்று கூறி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பகுதியின் மொத்த வாக்காளர்களையும் திமுகவினர் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி உள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஆளுங்கட்சியினர் பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக சார்பில் முறையான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சத்யா நகரை சேர்ந்த ஏராளமான வாக்காளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கம், கறி சோறு உள்ளிட்டவற்றை, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வழங்கியதோடு, அந்த வாக்காளர்களை பேருந்து மூலம் இன்பச்சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். திமுக நிர்வாகியே இந்த அத்துமீறலை ஒப்புக்கொண்ட வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி உள்ளது.YouTube video player

Exit mobile version