எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு.. கருப்பு மாஸ்க் அணிந்து சட்டபேரவையில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள்..!

இன்றைய சட்டபேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு மாஸ்க் அணிந்து கலந்துகொண்டனர்.  விடியா திமுக அரசு சட்டப்பேரவையில் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளை ஒளிப்பரப்புவதை தடை செய்கிறது. முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் பேசுகையில் அவரது உரையை ஒளிபரப்பாமல் விட்டுவிடுகிறார்கள். மேலும் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதுபோன்ற பல்வேறு அராஜகத்தினால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு மாஸ்க் அணிந்து தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
YouTube video player

Exit mobile version