பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் அராஜகம்

கடலூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு கொடுப்பதில் திமுக கட்சியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கட்சியினர் தொந்தரவு கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த லால்புரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில், திமுகவினர் தங்களுக்குத்தான் முதல் டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பொங்கல் தொகுப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், அதன் டோக்கன் பெறுவதிலும் திமுகவினர் அராஜகம் செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version