தீபாவளி பண்டிகை: சென்னையில், 24 மணி நேரமும் சிறப்பு மாநகர பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, சென்னையில் 310 சிறப்பு மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக 24 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை, தமிழக அரசு இயக்குகிறது.

இந்த நிலையில், மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு மற்றும் கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் இயங்கும் இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பொது மக்கள் செல்வதற்கு ஏதுவாக, இந்த 3 நாட்களுக்கும் 310 சிறப்பு மாநகர பேருந்துகள், 24 மணி நேரமும் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version