வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படுகிறது. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வாக்கு எண்ணும் மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கை தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவித்தார்.

Exit mobile version