டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம்?!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்களாக அலுவல் பணிகள் முடங்கின. இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகின்றன. இதில், டெல்லி வன்முறை தொடர்பாக, இன்று விவாதம் நடைபெறுகிறது. மேலும், மத்தியப்பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பான விவகாரமும் நாடாளுமன்த்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version