கலாய்ப் பார்ட்டி லியோனிக்கு கட்டம் சரியில்ல..!

நண்டு கொழுத்தா வளையில தங்காதும்பாங்க… அதே மாதிரியான தொணியிலதான் நடந்துக்கிட்டு இருக்காரு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரா இருக்குற திண்டுக்கல் லியோனி…

வாய் இருக்குங்குறதுக்காக வகை தொகை இல்லாம பேசி வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பலகுரல் பச்சோந்தி, இப்போ புதுசா, அவர் அத சொன்னாரு.. இவர் இத சொன்னாருங்குற போர்வையில, புரட்சித்தலைவி தொடர்பா விஷமத்தனமா பேசியிருக்காரு… திமுக மேடைகள்ல பேசுறதுக்காக கொடுக்கிற paymentக்காக, உங்களிலேயே நான்தான் மிகப்பெரிய கோமாளிங்கிற ரேஞ்சுல மிமிக்ரி, மோனோ ஆக்டிங்லாம் செஞ்சிக்கிட்டு இருக்குற லியோனியோட விஷமத்தனமான பேச்சு தொடர்பா அதிமுக சார்பா காவல்துறை உயர் அதிகாரிகள்கிட்ட பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கு… அதுமட்டுமில்லாம அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொதிச்சு கொந்தளிச்சு போய் தங்களோட வன்மையான கண்டனங்களையும் தெரிவிச்சிகிட்டு இருக்காங்க…

ஏற்கனவே திண்டுக்கல் லியோனி பண்ணுன சில்லுண்டித் தனங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வெட்டவெளிச்சமானதுதான்….

சட்டமன்ற தேர்தலப்போ பிரசாரம் பண்ணுறேங்கிற பேருல தாய்க்குலத்தை இடுப்பு பெருத்து போயிருக்கு… பேரல் மாதிரி மாறிப்போயிருக்குன்னு சொல்லி கொச்சைப் படுத்துனவருதான் இந்த திண்டுக்கல் லியோனி…

2021 தேர்தல்ல திமுக ஜெயிச்சதும், திண்டுக்கல் லியோனிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவரா நியமிச்சிச்சு…

அதுக்கப்புறம் கூட்டங்கள்ல கலந்துகிட்டு பேசும்போது, இந்து மத கடவுகள்கள அவதூறா பேசுறது, இந்து மத சடங்குகள கொச்சைப்படுத்துறதுன்னு ட்ராக்க மாத்திக்கிட்ட லியோனி மேல இந்து அமைப்புகள் வழக்குகள தொடர்ந்துருக்காங்க.

சமீபத்துல கூட மலேசியாவின் பினாங்கு நகரத்துல நடந்த பட்டிமன்றத்துக்கு போன லியோனி, 2 மணிநேரம் தாமதமா போயிருகாரு. அதனால ஆத்திரமடைஞ்ச மலேசியா வாழ் தமிழர்கள், நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி லியோனிய திருப்பி அனுப்பியிருக்காங்க. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாச்சு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட கும்பகோணத்துல நடந்த திமுக பொதுக்கூட்டத்துல லியோனி கொடுத்த ஒவ்வொரு மோனோ ஆக்டிங்கும் ஆபாசத்த அள்ளித் தெரிக்கிறமாதிரி இருந்துச்சு…
மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா, கூடாதான்னு கேட்ட கேள்விக்கு கருணாநிதி எப்படி பதில் சொன்னாருன்னு நடிச்சுக் காட்டுனாரு பாருங்க ஒரு நடிப்பு… நீங்களே அத பாருங்க…

இப்படி லியோனி நடிச்சிக் காட்டுனது அங்க இருந்த பெண்களுக்கு எல்லாம் எரிச்சலாகி இருக்கு… இப்படி தொடருதையும், அணைக்கிறதையும் பேசிக்கிட்டு இருந்தவரு ஒருகட்டத்துல தடாலடியா முதலிரவு சம்பந்தமா பேசவும் கூட்டத்துல சலசலப்பாகிடுச்சு.

அப்படியும் விடாம இன்னொரு முதலிரவுன்னு அதப்பத்தியும் விரசமா நடிச்சுக் காட்ட வில்லங்கமாகிப் போச்சு.

இப்படி பொதுநிகழ்வுகள்ல காமெடிங்கிற பேருல ஆபாசமா பேசுறது மட்டுமில்லாம, திமுக தலைவர்கள தூக்கிப் பிடிக்கிறதா சொல்லி மத்தவங்கள ரொம்பவும் கீழ்த்தரமாவும் லியோனி பேசியிருக்காரு…

திருவள்ளூருல திமுகவோட நிகழ்ச்சியில பேசுனப்போ செருப்ப தலையில சுமந்தவங்களுக்கு மேயர் பதவி கொடுத்தது ஸ்டாலின்னு சொன்னவருதான் லியோனி…ஸ்டாலின தூக்கிப் பிடிக்கிறதுக்காக எங்கள எதுக்கு கேவலமாப் பேசணும்னு பட்டியலின மக்கள் எல்லாம் அவர் மேல கொதிச்சிப் போயிருக்காங்க. இவர் மேல வன்கொடுமை சட்டம் ஏன் பாயலன்னு அந்த மக்களோட கேள்விக்கு போலி சமூகநீதி பேசுற விடியா அரசு எந்த பதிலையும் இதுவரைக்கும் சொல்லல…

இப்படி எல்லாம் ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி மனுஷன கடிச்ச கதையா இப்போ அதிமுக தேன்கூட்டுல வாய வச்சிருக்காரு… பாவம் லியோனிக்கு கட்டம் சரியில்லையோ என்னவோ? கொளவிகளோட கொட்டுல ஐ பட வில்லன் மாதிரி ஆகாம இருந்தா சரிதான்..

Exit mobile version