தோனியின் வெற்றி சீக்ரெட்டை போட்டு உடைத்த அஸ்வின்!

இந்திய அணி இறுதியாக கோப்பை வென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். தோனி இருக்கும்போது வெல்ல முடிந்த கோப்பையை தோனி இல்லாதபோது ஏன் வெல்ல முடியவில்லை என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாக தோனியின் வெற்றி ரகசியம் என்னவென்று அஸ்வின் கூறியுள்ளார்.

தோனியின் வெற்றி சீக்ரெட் இதுதான், தனது கேப்டன்சியில் முதலில் முடிவு செய்யும் 11 வீரர்களுடன் தான் இறுதி வரை விளையாடுவார். தன்னுடன் விளையாடும் எந்த வீரர்களின் மனதிலும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க விரும்பமாட்டார். அந்த செயல்பாடே வீரர்களுக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்து, தோனிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது என்று ரவி அஸ்வின் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version