சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடை விடுமுறை மற்றும் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். புனித தளமான ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் பித்ருக்களுக்கு பிண்டம், எல்லு வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்கு பூஜைகள் செய்யபட்டு வழிபாடு நடத்த மக்கள் ஏராளமானோர் வந்தனர்.

இதனால் அப்பகுதிகளில் ஏற்பட்ட கூட்டநெரிசல் கரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் போலீசார் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Exit mobile version