சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: ஜோதி வடிவில் காட்சி தந்தார் ஐயப்பன்

சபரிமலையில், மகர ஜோதி தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.

சபரிமலையில், பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜையின் இறுதிநாள் வழிபாடான மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற்றது. ஐயப்பனுக்கு அணிவிக்க, பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் கடந்த 12 ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட திருவாபரணங்கள் சன்னிதானத்தை அடைந்தது.

18 ஆம் படி வழியாக திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்த பிறகு, பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகரஜோதி தெரிந்தது. ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பனை, சரண முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Exit mobile version