மகாராஷ்டிரா: பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக பட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, பாஜக – சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிற நிலையில், பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் வெள்ளிக்கிழமை, பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமையும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சந்திராபூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ கிஷோர் சோர்க்கேவார், தேவேந்திர பட்னாவிஸ்சை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.

Exit mobile version