உத்திர காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.3 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர்

வேலூர் மேலரசம்பட்டு உத்திரகாவிரியின் குறுக்கே அணை கட்ட 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஒடுகத்தூர் பேருந்து நிலையம் விரைவில் நவீன மயமாக்கப்படும். எக்காலத்திலும் திமுகவில் தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை என்றும் அதிமுக தொண்டர்களுக்காகவே இயங்கி வரும் இயக்கம் என்றும் குறிப்பிட்டார். மேலும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுக கூட்டணி வேட்பாளரை பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதேபோல், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், பதவிக்காக திமுகவில் படுகொலைகள் அரங்கேறி வருவதை சுட்டிக் காட்டினார்.

Exit mobile version