நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்: துணை முதல்வர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் 304-வது பிறந்த நாளையொட்டித் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவலில் உள்ள அவரது உருவச் சிலைக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.

 

Exit mobile version