மருதுபாண்டியர் சகோதரர்களின் 218-வது நினைவு தினம்: துணை முதல்வர் மரியாதை

மருதுபாண்டியர் சகோதரர்களின் 218-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

மதுரையில் சுதந்திர போராட்டத்திற்கு அடித்தளமிட்ட மருதுபாண்டியர் சகோதரர்களின் 218-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி மதுரை தெப்பகுளம் பகுதியில் அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version