டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு !

டெங்கு காய்ச்சலால் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது குழந்தைகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மாதரவரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவர்கள் தீக்சா, தக்சன் ஆகியோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தீக்சா, தக்சன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version