வரலாறு காணாத அளவு பனி மூட்டத்தில் மூழ்கிய டெல்லி

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இன்று அதிகாலை வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், கடுமையான பனிமூட்டம் நிலவியது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி,மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலையால் ரயில் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சரிதா விஹார்  பகுதியில் பனிமூட்டமானது மேக கூட்டமாய், நகர்ந்து சென்றன. கடும் பனியால், டெல்லியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நிலவி வரும் இத்தகைய பனி மூட்டதால் பல விபத்துகளும் நடந்து வருகின்றன.

Exit mobile version