வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி அதிகரிப்பு

வீர மரணம் அடைகிற ராணுவ வீரர்களின், குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவியை, 2 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு, தற்போது 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிதியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ போர் விபத்து நல நிதியத்தில் இருந்து, இந்த நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருணைத்தொகையாக பதவிக்கு ஏற்ப 25 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version