வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

2018-19 ஆம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2018 – 19ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரலில் துவங்கியது. அதன்படி நாடு முழுவதும் ஏராளமானோர் தங்களது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இவ்வாறு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிவடைய இருந்த நிலையில், கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் பல்வேறு அறிவுரைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டதும், அதன் படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version