4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இன்று மாலையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற மே 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடன் தாக்கல் செய்ய உள்ளனர்.

Exit mobile version