தேர்தல் களத்தில் இருந்தே ஓடும் நாள் விரைவில் வரும் !

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்குட்பட்ட பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன், தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், வட்டச்செயலாளர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள், பேன்ட் வாத்தியம் இசைத்தப்படி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ஏதேதோ பேசி வருகிறார்கள் என்று கூறினார். தேர்தல் பிரசாரத்தின் போது ஓடிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தேர்தல் களத்தில் இருந்தே ஓடும் நாள் விரைவில் வரும் என்று முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version