ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து: 15 பேர் பலி

 

ரஷ்யாவில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சைபீரியாவில் தங்கச் சுரங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த அணை ஒன்று திடீரென உடைந்ததால் சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த விபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த நிலையில்,16 பேர் மாயமானதாக ரஷ்ய அவசர காலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் நிகழ்விடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version