காதல் விவகாரத்தில் வாலிபரின் தந்தை வெட்டிக்கொலை

கரூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரின் தந்தை அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கம்மநல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிச்சைமுத்து, என்பவரின் மகளை மணிவண்ணன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பிச்சைமுத்துவின் மகளிடம் செல்போன் இருந்ததாக கூறி மணிவண்ணன் குடும்பத்தாரிடம் பிச்சைமுத்து குடும்பத்தார் தகராறு செய்தனர். இதில் மணிவண்ணனின் தந்தை பரமசிவம் வெட்டிகொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள லாலாபேட்டை போலிசார் வழக்கறிஞர் பிச்சை முத்து, முருகானந்தம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Exit mobile version