நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு!

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைவு. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

பிரதமரின் உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் 2016 மே 1 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 கோடி கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு செய்யலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோவின் விலை ரூ. 1.103 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக மார்ச் 1 ஆம் தேதி ரூ. 50 விலையேற்றம் செய்யப்பட்டது. இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையினால், தமிழகத்தைப் பொறுத்தவரை கேஸ் சிலிண்டர் விலையானது ரூ.918 ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

Exit mobile version