விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறியுள்ளது – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்!

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறியுள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.விழுப்புரத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகம் சூதாட்ட களமாகவும், போதை களமாகவும் மாறியுள்ளது என குற்றம்சாட்டினார்.

பல இளைஞர்களின் உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய அனைத்து கட்சிகளும் வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாமல், தடை சட்டம் இயற்றக்கூடாது என்றே நோக்கில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்காமல் விடியா அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். விடியா திமுக அரசு அரைவேக்காடுதனமாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்புவதும், அதை ஆளுநர் நிராகரிப்பதும் என இவர்கள் இருவருக்கும் இடையே மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டது செயல்படுவது போல் உள்ளது என்றும் விமர்சித்தார். மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநரிடம் ஒப்புதல் பெற அருகதையற்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் அவர் விமர்சித்தார்.

Exit mobile version