பட்டா கத்தியால் கேக் வெட்டி திருமண வரவேற்பு கொண்டாட்டம் : மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகன்

சென்னை திருவேற்காட்டில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண வரவேற்பைக் கொண்டாடிய மணமகன் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து பிணைப்பத்திரம் பெற்றுக் கொண்டு விடுவித்தனர்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பச்சையப்பான் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணமகனின் நண்பர்கள், நான்கு அடி நீள பட்டாக்கத்தியை மணமக்களின் கைகளில் கொடுத்து, கேக் வெட்டிக் கொண்டாடினர். மேலும், இளைஞர்கள் சிலர் கையில் பட்டாக்கத்தியுடன் மேடையில் நடனமாடினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில், திருமண வரவேற்பு விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் புவனேஷ் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து பிணைப்பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பினர்.
 

Exit mobile version