தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, இளம் பெண் உள்பட 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில், நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பபட்டு கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தடையை மீறி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, லோகேஷ் என்ற சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, சிறுவனை காப்பாற்ற முயன்ற மாதவன் மற்றும் அவரது தங்கை மாளவிகா ஆகியோர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 3 பேரையும் சடலமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலங்களை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்த பின்,விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த இளம்பெண் செல்பி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

Exit mobile version