ரயில் நிலையங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது : சைலேந்திரபாபு பெருமிதம்

தமிழகத்தில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறவில்லை என ரயில்வே டி.ஜி.பி.சைலேந்திர பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே காவல் பிரிவில், குற்றவியல் வழக்குகளில் சிறப்பாக பனியாற்றிய 198 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் ரயில்வே காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், ரயில்வே காவல்துறையின் நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்களின் மோதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்றார்.

Exit mobile version