கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயம்

திருமயத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

திருமயம் அருகே சான்றோர் ஸ்ரீ நடன முதல் அய்யனார் கோயில் சந்தனக்காப்பு விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில், 62 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயத்தை, சுமார் 2 ஆயிரம் பேர் பார்த்து மகிழ்ந்தனர். இறுதியில், வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு விழா கமிட்டியினர் சுழல் கோப்பை பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

 

Exit mobile version