கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச் சாவடிகளுக்கான வரைவு பட்டியல் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version