ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

கடலூர் அருகே ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி – இந்திராநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பிரதேஷ். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டிற்குள்ளேயே எப்போதும் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, தாய் சுகுணா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுவன், தனியறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நெய்வேலி நகர காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version