விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதால்,புதிதாக யாரும் தொழில் தொடங்க முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் விமர்சித்தார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் லஞ்சம் ஊழல், தலைவிரித்து ஆடுவதோடு, அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version