News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

விவசாயிகள் எதனை பயிரிட வேண்டும் என தீர்மானிக்கும் கார்ப்பரேட்

Web Team by Web Team
April 27, 2019
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
விவசாயிகள் எதனை பயிரிட வேண்டும் என தீர்மானிக்கும் கார்ப்பரேட்
Share on FacebookShare on Twitter

இந்த நாட்டில் ஒரு விவசாயி எதனை பயிரிட வேண்டும், எப்போது பயிரிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன என்பதற்கு உதாரணமாக நிகழ்ந்துள்ளது குஜராத் உருளைக்கிழங்கு விவகாரம். உருளைக்கிழங்கில் என்ன பிரச்னை என்று சாதாரணமான நினைத்துவிட வாய்ப்பு உண்டு. இதன்பின்னால் உள்ள சர்வதேச அரசியலை பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்திய விவசாயிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய பிரச்சனை ஒன்று குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு வடிவில் வந்திருக்கிறது… ஆம், சிறியோர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் வேதியியல் கலவையான லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் FL 2027 என்ற உருளைக்கிழங்கு ரகத்தை விளைவித்தது குற்றம் என்று குஜராத் விவசாயிகள் மீது புகார் கூறியுள்ளது பெப்சிகோ நிறுவனம்…

FL 2027 உருளை கிழங்கு ரகத்திற்கு தாங்கள் காப்புரிமை பெற்றுவிட்டதாக கூறும் பெப்சிகோ, உரிய அனுமதியின்றி அதனை விளைவித்ததாக சபர்கந்தா மாவட்ட சிறுவிவசாயிகளான பிபின் படேல், சபில் படேல், வினோத் படேல் மற்றும் ஹரி படேல் ஆகியோர் தலா ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது… இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் பாரம்பரிய விதை பரிமாற்ற முறையை பன்னாட்டு நிறுவனம் அழிக்க முயற்சிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்… தன் நிலத்தில் ஒரு பயிர் நல்ல விளைச்சலை கொடுத்தால், அதன் விதைகளை தனக்கு தெரிந்த பிறருக்கு கொடுத்து உதவுவது தான் விவசாயிகளின் வழக்கம்… அதன் அடிப்படையிலேயே குஜராத் விவசாயிகளும் FL 2027 ரக விதைகளை தங்களுக்குள் பரிமாற்றம் செய்துக்கொண்டுள்ளனர்… இந்த பாரம்பரிய முறையை தான் தவறு என்கிறது பன்னாட்டு நிறுவனமான பெப்சிகோ…

தங்களின் உரிமையை காக்கும் வகையில் பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் 2001ன் பிரிவு 39 அமைந்திருப்பதாக விவசாயிகள் கூறினாலும், அதேசட்டத்தில் உள்ள பிரிவு 64ஐ தமக்கு சாதகமாக பெப்சிகோ நிறுவனம் பயன்படுத்துகிறது… ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பது, விவசாயக் கூலிகள் பற்றாக்குறை என இந்திய விவசாயம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை எதிர்கால அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்று குஜராத்தில் நடந்தது நாளை எங்கும் நடக்கலாம், அதற்கு முன் இந்திய விவசாயிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது,….

Tags: agriculturecorporatefarmers
Previous Post

கடந்த 5 தலைமுறைகளாக ஏழ்மையை காங்கிரஸ் ஒழிக்கவில்லை

Next Post

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தேர்வு

Related Posts

தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
அரசியல்

தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

June 30, 2023
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !

February 14, 2023
மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
தமிழ்நாடு

மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !

February 14, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!
தமிழ்நாடு

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !
தமிழ்நாடு

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!
தமிழ்நாடு

ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

February 7, 2023
Next Post
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தேர்வு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தேர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version