சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 169 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தாக்குதல், சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை, நேற்று 132ஆக இருந்த நிலையில், இன்று 169 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் காய்ச்சலால் 7 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவின் உஹான் பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டினர், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Exit mobile version