தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் தற்போது குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நபருக்கு தற்போது செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை ஆலோசனைப்படி அரசு மருத்துவர்கள் அளித்த துல்லிய சிகிச்சையால் அவர் விரைவில் குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 15 வயது சிறுவனும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். இதனால், தமிழகத்தில் தற்போது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா இல்லா மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version