மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமிரி பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்டத்தில் இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதில் 39 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் கூறினார். தொடர்ந்து 28 பேருக்கு, கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Discussion about this post