இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

இந்தியாவில் மேலும் 18 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, இதுவரை 4 ஆயிரத்து 270 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,1 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 65 ஆயிரத்து 110 பேர் மீண்டு வந்துள்ளனர். இந்தியாவில் ஆங்காங்கே சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 44 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும், 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 8 பேருக்கும் , மகாராஷ்டிராவில் 5 பேருக்கும் , கர்நாடகாவில் 4 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் 118 நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version