இந்தியாவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,069 பேர் உயிரிழந்ததால் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 79,476 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,73,545 ஆக அதிகரித்துள்ளது. 9,44,996 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 54,27,707 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,00,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் 14,16,513 பேரும், ஆந்திராவில் 7,06,790 பேரும், கர்நாடகாவில் 6,20,630 பேரும், தமிழ்நாட்டில் 6,08,885 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 4,06,995 பேருக்கும், டெல்லியில் 2,85,672 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், மேற்குவங்கம், ஒடிசா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version