கொரோனா வைரஸ் பாதிப்பு :பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.  

சீனா உள்ளிட்ட 7 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிவரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் ஒரே நாளில் 98 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஹூபே மாகாணத்தில் 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 72,436 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதனிடையே, டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளை வெளியேற்ற அந்தந்த நாடுகளை சேர்ந்த குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் தென்கொரிய அரசு, கப்பலில் உள்ள தங்களது நாட்டை சேர்ந்தவர்களை வெளியேற்றியது. இந்த கப்பலில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 400க்கும் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version