"கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி"

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்குகளை போட திமுக முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடநாடு வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தம்மையும், அதிமுக கழகத்தை சேர்ந்த சிலரையும், அந்த வழக்கில் சேர்க்க திமுக சதி செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அரசியல் ஆதாயம் தேடும் வகையில் திமுக போடும் பொய் வழக்குகளை கண்டு அதிமுக ஒருபோதும் அஞ்சாது எனக் கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் அரசியல் நாடகங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என உறுதிப்படத் தெரிவித்தார்.

 

Exit mobile version